districts

img

2 பெண் பிள்ளைகளுடன் உயிருக்கு பயந்து வாழ்வதாக ஆட்சியரிடம் மனு

கடலூர், பிப். 6- கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் திங்களன்று (பிப். 6) நடைபெற்றது.  ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அதிகாரிகள் மனுக்களை பெற்று அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இந்நிலையில் விருத்தாச்சலம் பெரிய காப்பான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மனைவி கற்பகம். இவர் தனது 2 மகள்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், எனக்கும் எனது கணவர் அருள்தாஸ் என்பவருக்கும் திருமணமாகி, இரண்டு மகள்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு எங்களை வீட்டில் இருக்கக் கூடாது என மிரட்டி வருகிறார். இதன் காரணமாக நாங்கள் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறோம். இது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கும், எனது மகள்களின் வாழ்க்கையை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.