சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறையில் நடைபெற்ற இளையோர் செஞ்சிலுவை சங்க தன்னார்வத் தொண்டர்களுக்கான நோக்குநிலை பயிற்சி முகாமை மண்டல ஒருங்கி ணைப்பாளர் ராஜ்பிரவீன் தொடங்கி வைத்து பேசினார். வேளாண் துறை முதல்வர் சுந்தரவரதராஜன் தலைமை வகித்தார். மேலும் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு குழு காப்பீட்டுக்கான சான்றை சிதம்பரம் காந்தி மன்ற செயலாளர் ஜானகிராமன் வழங்கினார். விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன், வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.