districts

img

கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்பதே இருக்காது: அமைச்சர் அன்பில் மகேஸ்

கடலூர், ஆக.20- கொரோனா காலத்திற்குப் பின்னர் மாணவர்களை படிப்படியாக வளர்த்தெடுக்கும் சூழல் உள்ளது. மனதளவில் பாதிப்பு உள்ள மாண வர்களை தகுந்த ஆசிரியர்கள் மூலம் 44 வட்டங்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று 800 மருத்துவர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாண வர்களுக்கு மனநலம் சார்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மனவியல் சார்ந்த பிரச்சனைகளை போக்க வாழ்வியல் சார்ந்த புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு உள்ளது. ஆசிரியர்களின் பயிற்சி முறை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ள கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி செவ்வாய்க்கிழமை (ஆக.20) ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்போது வகுப்பறைகளுக்கு சென்ற அமைச்சர் மாணவர்களுடன் உரையாடினார். மேலும், ஆசிரியர்கள் பாடம் நடத்து வதை மாணவர்களோடு கவனித்தார்.

பின்னர், ஆசிரியர்களிடம் வருகை பதிவேடு, மாணவர்களின் வருகை, பள்ளிகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர், “இந்த ஆய்வில் பள்ளி உட்கட்ட மைப்பு தொடர்பான சில கோரிக்கை வந்துள்ளது. அவை நபார்டு வங்கிகள் மூலம் நிதிகள் பெறப்பட்டு பள்ளிகளில் செயல்படுத்தப்படும்”என்றார்.

திட்டக்குடியில் நடைபெற்ற சம்பவம் வேதனைக்குரியது. மாண வர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க முடியாது. மனநலம் சார்ந்து தான் திருத்த முடியும் இதுதான் எங்கள் கடமை. மாணவர்கள் ஒழுங்கினமான செயல்களில் ஈடுபடும் போது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்படும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்று பெயர் இல்லாமல் அனைத்து மாவட்டத்தை யும் முன்னேற்ற முயற்சிகள் செய்யப் படுகிறது. பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் நலனுக்காக 67 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையும் தாண்டி ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகிறது. இதையும் கண்டறிந்து நம்ம வீட்டுப் பிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு நல்வழிப்படுத்துவோமோ அவ்வாறு நல்வழிப்படுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.