கடலூர், ஜூன் 19 - குழந்தைகள் மீதான வன் முறைக்கு எதிரான பிரச்சாரத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தொடங்கியுள்ளது. ஜூன் 17 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 41 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
குழந்தை கள் பாதிக்கப்படும்போது, சமூகம், குடும்பம், அரசு செய்ய வேண்டிய பணி களை பட்டியலிட்டு பிரச்சாரம் நடை பெறுகிறது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதி யாக செவ்வாயன்று (ஜூன் 18) கடலூர் நகராட்சிக்குட்பட்ட தானம் நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று பெண்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து பிரச்சார இயக்கத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் எஸ்.சாந்தகுமாரி தலைமை தாங்கி னார். மாநிலத் தலைவர் எஸ்.வாலன்டினா, மாவட்டச் செயலாளர் பி.மாதவி, மாவட்டப் பொருளாளர் எஸ்.ரேவதி, துணைத் தலைவர் எம்.ஜெயசித்ரா, துணைத் தலைவர் கே.அன்பு செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.