கடலூர்,பிப்.14- வயதானவர்களை அலைகழிக்கும் மஞ்சக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் அமைப்பினர் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் வலியுறுத்தினர். இந்த அமைப்பின் சிறப்பு தலைவர் ஜி.பாஸ்கரன், தலைவர் எம்.ஐ.மோகன், செயலாளர் ஆர்.பழனி வேல், பொருளாளர் கே. குணசேகரன், துணை செயலாளர்கள் ஆர்.சந்தானம், ஜி.பூங்குன்றன், உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த னர். விவரம் வருமாறு:- அரசு போக்குவரத்து கழகத்தில் கடலூர் பணி மனையில் பணியாற்றி பணி ஓய்வு பெற்று மரணமடைந்த தொழி லாளி யின் மனைவி 60 வயதுக்கு குறைவாக இருந்தால் ஓய்வூதியம் பெற கிராம நிர்வாக அலுவலரால் சான்றொப்பம் பெற்று வரும்படி நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படுகிறது. அதே போன்று தொழி லாளர்களின் வாரிசுகளுக்கு நிர்வாகத்தால் கொடுத்தி ருக்கும் படிவத்தில் அதில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படத்தில் அந்த பகுதிகளை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர் சான்று அளிக்க வேண்டும் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது கடலூர், மஞ்சக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் வரன் வாரிசு தாரர்களை தாலுகா அலு வலக ஒப்புகை, வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் என இழுத்தடித்து கால தாமதமாக கொடுக் கிறார். இதனால் மஞ்சக் குப்பத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வயதான வர்களையும் அலைக் கழித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் உரிய விசா ரணை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.