districts

குறிஞ்சிப்பாடி பேரூர் குழு செயலாளராக வி.மணிவண்ணன் தேர்வு

கடலூர், ஜூன் 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குறிஞ்சிப்பாடி பேரூர் அமைப்புக்குழு கூட்டம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.ராஜ் தலைமையில் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது.  

கடலூர் மாவட்ட செயலாளர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம், ஒன்றிய செய லாளர் எம்.பி. தண்டபாணி,மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.சிவகாமி,ஆர்.கே சரவணன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 9 பேர் கொண்ட குறிஞ்சிப்பாடி பேரூர் அமைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.புதிய அமைப்புக்குழு செயலாளராக வி.மணிவண்ணன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். தீர்மானம் குறிஞ்சிப்பாடி நகரத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கிட வேண்டும்,குறிஞ்சிப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவ வேண்டும், கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் தனியார் பேருந்துகள் குறிஞ்சிப்பாடியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யவேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.