districts

img

குமார்-ஆனந்தன் நினைவுதின ரத்ததான முகாம்

கடலூர், ஜூலை 18 – கடலூர் மாவட்டம், புதுப்பாளையத்தில் கள்ளச்சாராய வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட குமார் ஆனந்தன் 25வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு வட்டச் செயலாளர் வி.விஜயராஜ் தலைமை தாங்கினார். ரத்த தான முகாமை அரசு தலைமை மருத்துவ அலுவலர் இ.மாலினி துவக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சே.வினோத்குமார், மாவட்டத் தலைவர் கே.சின்னத்தம்பி, எம்.கலைவாணன், எஸ்.விஜயகுமார் மற்றும் எஸ்.ஜீவானந்தம், சு.சாந்தகுமார் (ஆசிரியர் கூட்டணி) ஆகியோர் உரையாற்றினர்.