கடலூர், ஜூலை 19- கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் இணைய வழியாக வருமான வரி தாக்கல் செய்தல் மற்றும் நிலுவைத் தொகையை குறைப்பது தொடர்பாக மாவட்ட கருவூல துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது.
புதுச்சேரி வருமான வரி அலுவலர் கே.செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் பேசினர்.