சிதம்பரம், நவ 10- அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமை பணிக்கான தேர்விற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக சென்னை இம்பேக்ட் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்கலைகழக துணைவேந்தர் ராம.கதிரேசன், பதிவாளர் சீதாராமன் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. இதில் பல்கலைக்கழக புரிந்துணர்வு ஒப்பந்த இயக்குனரக இயக்குனர் கருப்பையா, பல்கலைக்கழக பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் இயக்குனரக இயக்குநர் கிருஷ்ணசாமி, இம்பேக்ட் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் வெங்கடேஷ்குமார் மற்றும் பல்கலைக்கழக புரிந்துணர்வு ஒப்பந்த இயக்குனரக தனி அதிகாரி பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.