கடலூர், பிப். 17- சிந்தனை சிற்பி சிங்கார வேலர் 163ஆவது பிறந்த தினத்தையொட்டி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐ டியு சார்பில் ஜவான் பவன் அருகில் உள்ள சிங்கார வேலர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் டி. பழனிவேல் ஆகியோர் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் பி.கருப் பையன், வி.சுப்பராயன், ஜெ.ராஜேஷ்கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் கள் ஆர்.ஆளவந்தார், எஸ்.கே.பக்கிரான், எம்.சிவானந்தம், எஸ்.தட்சிணா மூர்த்தி, ஜி.பாஸ்கரன், நகரக்குழு உறுப்பினர்கள் சந்தாகுமாரி, திருமுருகன், பழனி, தமிழ்மணி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி, கலை வாணன், அரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரி யாதை செலுத்தினர்.