districts

img

ஆளுநரின் அடாவடி பேச்சு: ஏப். 12 கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஏப்.8- ஆளுநரின் அடாவடி பேச்சை கண்டித்து கடலூரில் ஏப்.12 அன்று திமுகவின் தோழமைக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்களின் அடாவடி பேச்சு களை கண்டித்து அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோ சனைக் கூட்டம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியயின் கட லூர் மாவட்டக் குழு அலுவ லகத்தில் நடைபெற்றது. திமுக மாநகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் தாங்கி னார். சிபிஎம் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ப ராயன், ராஜேஷ் கண்ணன், மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றியச் செயலாளர் பஞ்சாசரம், காங்கிரஸ் மாநில துணை தலைவர் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாவட்ட துணைச் செய லாளர்  திருமேனி, மாநில துணைச் செயலாளர் ஸ்ரீதர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் குளோப், மதிமுக மாநில செயற்குழு உறுப்பினர் சேகர், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ர`ஹிம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதைக்கும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை நிறைவேற்றியும் ஆளுநர் ஒப்புதல் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் சமீ பத்தில் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் ஆளு நர் பேசுகையில் ஒரு மசோதாவை நிலுவையில் வைப்பது என்பது கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிரா கரிப்பதாகத்தான் அர்த்தம் என்று கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் கூடங்குளம் போராட்டங்கள் அன்னிய நாடுகளின் நிதியால் நடந்தவை என்றும் தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் சமூக சலசலப்பையும் தேவையற்ற பதற்றங்களையும் உருவாக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் பேசி வரும் ஆளுநரை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் கடலூரில் ஏப்ரல் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.