கடலூர், ஜன. 25- அரசாணை 56ஐ உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எழுத்து தேர்வை ரத்து செய்து வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும், யூஜிசி நிர்ணயித்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், கவுரவ விரிவுரையாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இளவரசன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்ணதாசன், பொன்னம்பலம், ராஜகுரு, கலைச்செல்வன், இந்திரா தேவி, புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.