கடலூர்,ஜூன்14- வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23.40 லட்சம் மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்த செந்தமிழ் செல்வன் (வயது 57). சுமார் 15 வருடங்கள் அல்ஜீரியா நாட்டில் பொக்லைன் ஓட்டுநராக பணியாற்றிவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரது நண்பர் ரமேஷ் (57). இவர்கள் இரு வரும் நண்பர்களாக இருந்துள்ளனர். ரமேஷ் வேலை நிமித்தம் காரணமாக மேற்கு வங்காளம் சென்று அங்கேயே வசித்து வந்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு செந்தமிழ் செல்வனை தொடர்பு கொண்ட ரமேஷ், தான் தற்போது மால்டா தீவில் 3 வருட மாக வேலை செய்து வருவதாகவும், செந்தமிழ் செல்வன் மகனுக்கு மால்டா நாட்டில் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், மேலும் அவருக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது இருந்தால் அவர்க ளுக்கும் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்றும் கூறி யுள்ளார். இதை நம்பிய செந்தமிழ்ச்செல்வன் தனக்கு தெரிந்த சுமார் 10 பேரிடம் இருந்து ரூ.23 லட்சத்து 40 ஆயிரத்தை பல்வேறு தவணைகளில் ரமேஷின் உறவினரான மைக்கேல் துஷார் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் ரமேஷ் கூறியபடி யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. நண்பர்களுடன் தலைமறைவாகி விட்டார். இது குறித்து செந்தமிழ்ச்செல்வன் கடலூர் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் குருசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ரமேசையும், மைக்கேல் துஷாரையும் தேடி வந்தனர். இந்நிலையில் ரமேஷும் மைக்கேல் துஷாரும் மேற்கு வங்கா ளத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனி ப்படையினர் இருவரையும் கைது செய்தனர்.