கடலூர், மார்ச் 6- காவல்நிலைய சாவுக்கு காரணமான ஆய்வா ளர் ராஜாவை பணியிடை மாற்றம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கடலூர் மாவட்டம், பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்த ரேவதி யின் கணவர் சுப்பிரமணி 29.2.2015 அன்று வழக்கு விசாரணைக்கு நெய்வேலி நகரக் காவல் நிலையத் திற்கு அழைத்து சென்ற னர். பிறகு, அங்கு ஆய்வா ளர் ராஜா மற்றும் காவ லர்களால் சித்திரவதை செய்து அடித்து கொல்லப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட் டத்தால் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப் பட்டது. இதனையடுத்து, ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் ஆகிய 3 பேர் மீதும் குற்றம் சாட்டப் பட்டு, இது கொலையாகாத மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக நடை பெற்ற இந்த மனுவின் மீதான விசாரணையில் 22.8.2022 அன்று குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ராஜா, சிறப்பு உதவி ஆய்வா ளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் மீது கொலை மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவு களின் கீழ் மாற்றம் செய்து கடலூர் மாவட்ட சிறப்பு எஸ்சி, எஸ்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள சூழ்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஆய்வா ளர் ராஜா மீண்டும் கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்திற்கு ஆய்வாள ராக பணியில் சேர்ந்துள் ளார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையிலுள்ள நிலையில் அவரை பணி யிட மாற்றம் செய்யக் கோரி யும், அவரது ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி யும், தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டியும், பாதிக் கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கக் கோரியும் கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தை முற்று கையிடுவதற்கு 500 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். அப்போது, பழைய ஆட்சியர் அலுவலகம் அருகே தடுப்புகளை அமைத்து மேலும் முன்னேறிச் செல்லவிடாமல் காவலர்கள் தடுத்து நிறுத்தி னர். இதையடுத்து, அங்கே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.ஆறுமுகம், சிறு பான்மை மக்கள் நலக் குழு தலைவர் மூசா ஆகியோர் பேசினர்.