கடலூர், ஜூன்19- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கடலூர் மண்டல நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. மண்டல தலைவர் எஸ். சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணன், மாநில பொருளாளர் வரதராஜன், மாநில துணை செயலாளர் பலராமன், கடலூர் மண்டல பொதுச்செயலாளர் ஜி.பாஸ்கரன், துணை பொதுச் செயலாளர் எம். முத்துக்குமரன், மண்டல பொருளாளர் ஆர். பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக வழங்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ளதை உடனே வழங்க வேண்டும், 105 மாதமாக வழங்கப்படாமல் உள்ள டி.ஏ வழங்க வேண்டும், விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி மற்றும் சம்பள பிரிவு கணக்கு பிரிவு ஆகியவற்றை கடலூர் மண்டல அலுவலகத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.