districts

img

பட்டாசு ஆலையில் விபத்து: பெண் பலி

கடலூர், மார்ச் 6- கடலூர் அருகே சிவனார் புரம் பகுதியில் இயங்கி வந்த  நாட்டு பட்டாசு தொழிற் சாலையில் ஞாயிறன்று (பிப்.5) ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் உயிர் இழந்த நிலையில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர் பாக ரெட்டிச்சாவடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் சேகர் (55), அவரது மனைவி கோசலா (50) இருவரையும் காவல் துறையினர் கைது செய்த னர். மேலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்துள் ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப் பிரமணியம் உத்தரவிட்டுள் ளார். மேலும், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளவர்களை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.