districts

சர்க்கரை ஆலைக்குள் விபத்து

கடலூர்,டிச.31- கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம், வைடிப் பாக்கத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 40). இவர்  நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலையில் ஒப்பந்த துப்புரவு பணி யாளராக பணிபுரிந்து வரு கிறார்.

 தற்போது சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கப்பட்ட நிலையில் கரும்புகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி யார்டில் சென்று கொண்டி ருந்தது.

 அப்போது பாப்பாத்தி மீது எதிர்பாராமல் மோதி யதில் பலத்த காயம் அடைந்தார். உடனே  அங்கு  இருந்தவர்கள் பாப்பாத் தியை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பாப்பாத்தி உடலை பரிசோதனை செய்த மருத்து வர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித் தார். இத்தகவலை அறிந்த பொதுமக்கள், உறவினர்கள் தனியார் சர்க்கரை ஆலை முன்பு திரண்டனர். பின்னர் இறந்த பாப்பாத்தி குடும் பத்தை சேர்ந்த ஒருவருக்கு வேலையும், ரூ15 லட்சம்   நஷ்டஈடும் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் அவர்களை அழைத்துப் பேசினர். அப்போது கோரிக் கையை ஆலை நிர்வாகம்  ஏற்றுக்கொள்ளும் வரை போராட்டத்தை கை விட மாட்டோம் என திட்டவட்ட மாக கூறினர்.