கடலூர்,ஜூன் 20 - நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கடலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டது. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமாறன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நேரடி கொள் முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போதிய ஊதியம் வழங்க வேண்டும்,
கடலூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்ட அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதை மாவட்ட தலைநகரில் அமைக்க வேண்டும். போதை பொருட்களை ஒழிக்க தனி குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை கிராமத்தில் 10 பேருக்கு வழங்கப்பட்டது,
இதில் தற்போது 7 பேர் நீக்கம் செய்யப்பட்டு 3 பேருக்கு மட்டுமே வழங்கப் படுகிறது. இதற்கு மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. அதனால் விடுபட்ட அனைவருக்கும் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலையில் மருதூர் பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அரசு பேருந்து களில் பெண் பயணிகளை முறையாக ஏற்றிச்செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.