சிதம்பரம், நவ. 28- கடலூர் மாவட்ட ராஜ முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 300க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் அக்டோபர் மாத ஊதியம் இன்னும் வழங்க வில்லை. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வலியுறுத்தி யும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஊதியத்தை வழங்கக் கோரி 300க்கும் மேற்பட்ட பேராசியர்களும், மருத்துவர்களும் ஊர்வலமாகச் சென்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திருப்பதியிடம் மனு அளித்தனர். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசனிடமும் மனு அளித்த னர். மனுவை பெற்றுக் கொண்ட துணைவேந்தர், இந்த மருத்துவக் கல்லூரியை உயர்கல்வித் துறையில் இருந்து மருத்துவத் துறைக்கு முழுமையாக மாற்று வதில் இன்னும் சில சட்ட நட வடிக்கைகள் உள்ளது என்றும், விரைவில் அக்டோ பர் மாத ஊதியம் வழங்குவதற் கான நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என உறுதியளித்தார். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.