கடலூர், ஜூலை 9- மருங்கூர் அகழாய்வில் வட்டச்சில்லு கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் மருங்கூரில், தமிழக தொல்லியல் துறை யின் இணை இயக்குநர் சிவானந்தம் தலை மையில், அகழாய்வு பணி நடைபெறு கிறது. இதில் வட்டச்சில்லுகள் கண்டெ டுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் சமூகவலைத்தள பதிவில், கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் வட்டச் சில்லுகள் கண்டெடுக்க ப்பட்டுள்ளன. தமி ழர்கள் பொதுவாக ஓய்வு நேரங்களில் தங்களது பொழுதுபோக்கிற்காக உடல் உழைப்பு மற்றும் அறிவு சார்ந்த விளை யாட்டுகளை விளையாடுவது வழக்கம். மருங்கூரில் வாழ்விடப்பகுதியில் மேற் கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் கடந்த வாரம் இராசராசன் காலச் செம்புக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தற் போது, பல்வேறு அளவுகளில் சுடுமண் ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெ டுக்கப்பட்டுள்ளன. பெண்களும் சிறுவர் களும் இந்த வட்டச்சில்லுகளைப் பயன் படுத்தி விளையாடியுள்ளனர். இத்த கைய விளையாட்டுகள் பாண்டி விளை யாட்டு என்று தற்போது அழைக்கப்படு கிறது. வட்டச்சில்லுகள் கண்டறியப் பட்டுள்ளதன் வாயிலாகத் தற்போது அக ழாய்வு செய்யப்படும் இடம் மக்கள் கூடி வாழ்ந்த ஒரு வாழ்விடப்பகுதிதான் என் பது உறுதியாகின்றது.என்று தெரிவித் துள்ளார்.