கடலூர் மாவட்ட பொது விநியோகத் திட்டத்தில் உள்ள சில குறைகளையும் களைந்து பலப்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் ஆர். இளங்கோவன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர். புவனேஸ்வரன், மண்டலச் செயலாளர் ஜி.சுதர்சன் பாபு, சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.