கடலூர், மார்ச்.7- கடலூர் மாவட்டத்தில் எழுத்தாளர்களை புறக்கணித்து விட்டு புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாவட்டச் செய லாளர் கவிஞர் பால்கி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- தமுஎகச எடுத்த முன் முயற்சியாக கோரிக்கை சாசனம் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைக்கப்பட்டது. அதன் விளைவாக புத்தக கண்காட்சிகள் அனைத்து மாவட்டங்க ளிலும் நடத்தப்பட்டு வருகிறது. கடலூரில் முதல் முறையாக நடத்தப்படும் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டங்கள், இலக்கிய அமைப்புகளை உள்ள டக்கி நடத்தப்படவில்லை. விளம்பரங்களும் செய்யப்பட வில்லை. அவசரகதியில் நடத்தப்படுகிறது. கடலூர் மாவட்டம் எழுத்தாளர் கள் இமயம், குறிஞ்சி வேலன், ஆயிஷா நடராஜன் ஆகிய விருது பெற்ற எழுத்தாளர் கள் இருக்கக்கூடிய பகுதி யாகும். மேலும் கடலூரில் இலக்கி யத்தை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை பல்வேறு அமைப்புகளும் செய்து வரு கின்றனர். இவர்களது பங்கேற்பு மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் இதர பகுதியினரை அரவணைத்து பங்கேற்பை உறுதிப்படுத்த கல்வி துறையும் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. என்பதும் வேதனை அளிக்கிறது. முக்கியமான பல பதிப்ப கங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்கவில்லை. கடலூர் மாவட்ட படைப்பாளிகளிகளை உள்ளடக்காமல், வெளியீடு களை பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இந்த புத்தக கண்காட்சி நடை பெறுகிறது. கடலூர் மாவட்ட எழுத்தாளர் களை கவுரவப்படுத்தாமல், அலட்சியப்படுத்தும் வகை யில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி மாநில முதல்வரின் வாசிப்பு கனவை சிதைப்பதாக அமைந்துள்ள தால் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.