கடலூர், மார்ச் 20- கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம், நல்லூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் குடியிருக்கும் 55 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை மற்றும் பட்டா வழங்கக் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூர் வட்டச் செயலாளர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமை யில், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், வட்டக் குழு உறுப்பினர் சாமிதுரை, கிளைச் செயலாளர் சந்திரன், ஜெய லெட்சுமி, செல்வி, அகிலா, சுதா ஆகியோர் வருவாய் அலுவலரிடம் 55 மனுக்களை வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக தெரிவித்தார்.