districts

img

ரேசன் கடை அமைக்க சிபிஎம் மனு

சிதம்பரம், மே 5- ரேசன் கடை கட்ட உரிய நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவ லகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பி னர் பிரகாஷ் தலையில் மேல நெடும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் இளைய சிங்கம், கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதில், காட்டுமன்னார் கடி வட்டம் மேல நெடும்பூர் ஊராட்சி விளத்தூர் மக்கள் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று, மேல வன்னி யூர் கிராமத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் அவல நிலை உள்ளது. இந்நிலையில் காட்டு மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரேசன் கடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஊரில் உள்ள புறம்போக்கு மந்தைவெளி இடத்தை ரேஷன் கடை கட்டுவதற்கு தேர்வு செய்த போது, அந்த இடத்தை தனிநபர் ஆக்கிர மிப்பு செய்து கடை கட்ட விடாமல் தடுத்து வருகிறார். அந்த இடத்தில் அங்கன்வாடி மையம், நூலகம் உள்ளது. அதற்கு அருகிலேயே ரேஷன் கடை அமைந்தால் பொது மக்களுக்கு உதவியாக இருக்கும். எனவே அரசு அந்த இடத்தில் ரேஷன் கடை அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.