தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற சிதம்பரம் மான சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவி ராஜலட்சுமிக்கு பாராட்டு விழா தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் குமராட்சி வட்டார கல்வி அலுவலர் குமார், சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர் புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டு மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினர்.