சிதம்பரம், நவ. 17- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 600க்கும் மேற்பட்ட சிறப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்பு அலு வலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இவர்களை தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களுக்கு பணி மாறுதல் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு அதிகாரிகள் காவல்துறையின் தடையை மீறி துணைவேந்தர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசனை நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் பணியிறக்கம் செய்வது என்றும், மற்ற அரசு பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு துறை களுக்கு பணி நிறைவு செய்ய அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறினார். மேலும் இது அரசு முடிவு என்றும், இதில் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.