districts

img

வடலூர் தைப்பூசத்தில் சிஐடியு அன்னதானம்

கடலூர்,ஜன.25- வடலூரில் நடைபெற்ற தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவில் நெய்வேலி என்எல்சி சிஐடியு தொழி லாளர்கள், ஊழியர் சங்கத்தின் சார்பில் சார்பில் பொதுமக்களுக்கு  உணவு வழங்கப்பட்டது. இதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.திரு அரசு ஆகி யோர் துவக்கி வைத்தனர் .

நெய்வேலி நகர செயலாளர் ஆர்.பாலமுரு கன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய  செயலாளர் எம்.பி. தண்ட பாணி, வடலூர் நகர அமைப்பு செயலாளர் ஆர். இளங்கோவன், வடலூர்  அமைப்புக்குழு ஏ. நமச்சி வாயம், ஆர்.மணி, எம்.மீனாட்சி நாதன் மற்றும் நெய்வேலி சிஐடியு சங்கத்தின் மணிமாறன், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் எம்.பூவை பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.