districts

img

குழந்தை திருமணம்: தீட்சிதர்கள் கைது

சிதம்பரம், செப் 8- சிதம்பரம் வடக்கு சன்ன தியைச் சேர்ந்த  தில்லை நாகரத்தினம் (60)இவரது மகன் பத்ரிசன் (20). நட ராஜர் கோவிலில் தீட்சி தர்களாக பணிபுரிந்து வரு கிறார்கள்.  இந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி கீழ வீதியில் பத்ரிசனுக்கும் 13 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட சமூக நல அலு வலர் சித்ரா அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்த திருமண ஏற்பாடுகளை செய்த மண மகனின் தந்தை தில்லை நாகரத்தினம் மற்றும் மண மகன் பத்ரிசன் ஆகிய இருவரையும் சனிக்கிழ மையன்று (அக்.8) கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  அதேபோல் சிறுமியின் தாய், தந்தை மற்றும் மண மகனின் தாய் ஆகிய 3 பேரை கைது செய்யும்  நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வரு கிறார்கள்.  இதே நாளில் அந்த திரு மண மண்டபத்தில் 10க்கும் மேற்பட்ட சிறுமிக ளுக்கு திருமணம் செய்யப் பட்டதாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.