districts

img

சி.கோவிந்தராஜன் 15ஆம் ஆண்டு நினைவு தினம்

கடலூர், ஜன. 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.கோவிந்தராஜன் 15ஆவது ஆண்டு நினைவு தினம் நெல்லிக் குப்பத்தில் அவருடைய நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிஐடியு ஸ்தாபக தலைவர்களில் ஒருவரு மான சி.கோவிந்தராஜன், மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான ஷாஜாத்தி கோவிந்தராஜன் ஆகியோரின் நினைவு தினம் வியாழனன்று (ஜன. 26) நெல்லிக்குப்பத்தில் உள்ள அவர்களுடைய நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார், ஜே.ராஜேஷ் கண்ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ஆளவந்தார், வி.கிருஷ்ணமூர்த்தி, திருமுருகன், வழக்கறிஞர் சம்கிராஜ், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ரேவதி, சந்திரா, சிபிஎம் பகுதி செயலாளர் ஜெயபாண்டியன், ஆர்.வி.சுப்பிரமணியம், வெங்கடேசன், சுந்தரபாண்டியன், தீபன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

;