districts

img

கிளைச் செயலாளர் காலமானார் தலைவர்கள் அஞ்சலி

கடலூர்,செப்.20- கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம் கார்குடல் கிராம மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செய லாளர் ஜி. தண்ணிமலை காலமானார். அவரது உடலுக்கு கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செய லாளர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், ஜி.ஆர். ரவிச்சந்திரன், மூத்தத் தலைவர் ஏ.சந்திரசேகரன், வட்டச் செயலாளர் என்.எஸ் அசோகன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். கலைச் செல்வன், வட்டக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கே. எம். குமர குரு, நெல்சன், கிளைச் செயலாளர்கள் மார்க்கெட் சேகர், வீரமணி, தமிழ்மணி, கர்ணன் மாதர் சங்கத் தலை வர் ஆர்.சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். நெல் அறுவடைக்கு இயந்திரம் வந்தபோது அதனை கட்சியின் கொள்கை பிடிப்போடு உறுதியாக எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்திய தோழர் தண்ணி மலை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கப் பணி களிலும் திறம்பட செயலாற்றிவர்.

;