கடலூர், மார்ச் 4- இந்தியா முழுவதும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் பாஜகவினர் தான் என்று திமுக அமைப்புச்செய லாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். கடலூரில் திங்க ளன்று அவர் செய்தியாளர்களிடம் பேசிய தாவது:
“அதிகமான போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவது குஜராத்தில் தான். அதானிக்குச் சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் தான் மொத்த போதைப் பொருள் கடத்தலும் நடை பெறுகிறது என எல்லாத் தரப்பினரும் கூறுகின்றனர். கடந்த பிப்ரவரி 28 அன்று 3,300 கிலோ போதைப் பொருள் முந்த்ரா துறைமுகத்தில் சிக்கியுள்ளது. இந்தியா முழுவதும் போதைப் பொருள் விற்ப வர்கள் பாஜகவினர் தான். இதை என்னால் ஆதாரத்தோடு கூற முடியும்.
தமிழகத்தில் எடப்பாடி முதலமைச்ச ராக இருந்தபோது குட்கா வழக்கில் சிக் கிய அமைச்சர் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. யார் யாரிடத்தில் அவர்கள் லஞ்சம் வாங்கினார்கள் என்ற விவரங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.”
இ்வ்வாறு அவர் பேசியுள்ளார்.