கடலூர், டிச.8 - கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆலடி சாலை காமராஜர் நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் (29). இவர் சிசிடிவி. விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி செல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடமாகிறது.
பெண் குழந்தை உள்ளது. தினேஷ் குமார் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த முருகனிடம் வட்டிக்கு பணம் வாங்குவது வழக்கம் என்று கூறப்படு கிறது. ஏற்கனவே பணம் வாங்கி அதை வட்டியுடன் கட்டி உள்ளார்.தற்போது தினேஷ் குமார், முருகனிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கியுள்ளார். அதற்கு வாரம் ரூ. 6 ஆயிரம் கட்ட வேண்டும் என முருகன் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தினேஷ்குமார் பணம் கட்ட தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 5 பேர் கும்பல் விருத்தாசலம் பேருந்து நிலை யத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில் தினேஷ் குமாரை அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பின்னர் தினேஷ் குமார் அவரது மனைவிக்கு போன் செய்ய சொல்லி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. பிறகு, தினேஷ் குமாரை விடுவித்துள்ளனர்.
கந்து வட்டி கும்பல் திட்டியதால் வேதனை அடைந்த செல்வி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கந்து வட்டி கும்பல் திட்டியதால் மன முடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருத் தாசலத்தில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.