சிதம்பரம், ஜூலை 1- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதை எதிர்ப்பு விழிப்பு ணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜ்பிரவின் துவக்கி வைத்து அதன் முக்கியத்துவம் குறித்தும், போதை எதிர்ப்பு உறுதிமொழியை மாண வர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஏற்க செய்தார். இந்நிகழ்ச்க்கு இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வரவேற்றார். கல்வியியல் துறை முதல்வர் குலசேகர பெருமாள், செஞ்சிலுவை சங்க இயக்குநர் இளங்கோவன், மற்றும் ரோட்டரி சங்க துணை இயக்குநர் தீபக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வழக்கறிஞர் ஜெய பாண்டியன், செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்கள் ரேணுகா, அன்பு மலர், சசிரேகா, சமூகப் பணியாளர் குப்பு சாமி, சிறப்பு அதிகாரி கா.ஹரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அண்ணாமலைநகரின் முக்கிய தெருக்கள் வழியாக இந்த ஊர்வலம் சென்றது. இதில் கலந்துகொண்டவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கையில் பாதகைகளை ஏந்திச் சென்றனர்.