districts

அண்ணா விளையாட்டு மைதானத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீர்

கடலூர், அக். 30- கடலூர் நகரின் மையப்பகுதியான மஞ்சக்குப்பத்தில் அண்ணா விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுதந்திரதின விழா நடை பெறும்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் தேசிய கொடி ஏற்றும் விழா நடந்து வரு கிறது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஒவ்வொரு விளையாட்டுக்கு என்று தனித்தனி மைதானம் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு கடலூர் நகர் பகுதி மட்டு மல்லாமல் பல்வேறு பகுதியில் இருந்து விளையாட்டு வீரர்கள் வந்து பயிற்சி பெற்று செல்கிறார்கள். இதுதவிர விளையாட்டு மைதானத்தை சுற்றி நடை பயிற்சிக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகாலை முதல் குறிப்பிட்ட நேரம் வரை கடலூரை சேர்ந்தவர்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கராத்தே, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளுக்கும் தனித்தனியாக இடம் உள்ளது. இவ்வாறு பல்வேறு வசதி கள் கொண்ட இந்த மைதானம் மழைக்காலங்களில் குளம்போல் மாறி விடுகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெற முடியாமல் அவதிப்படு கின்றனர். ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 8 செ.மீ. மழை கொட்டித் தீர்த்ததால் அண்ணா விளையாட்டு மைதானம் தற்போது குளம்போல் காட்சி யளிக்கிறது. இந்த மைதானத்துக்குள் யாரும் செல்ல முடியாத அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி தண்ணீர் தேங்க விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.