districts

img

கடலூரில் அதிமுக கவுன்சிலர் மகன் ரவுடித்தனம்: சிபிஎம் கண்டனம்

கடலூர்,ஜூலை.15- கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையத்தில் வீடுகள், கடைகளை இடித்து தள்ளிய அதிமுக கவுன்சிலர் மகனின் ரவுடித்தனத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடலூர் மாநகர 21 வது வார்டு உறுப்பினர் அலமேலு (அதிமுக) இவரது மகன் மணிமாறன். மாட்டுப்பட்டி தெருவில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு முறையாக வரி செலுத்தி வரும் கடைகள், வீடுகள், மரங்களை ஜேசிபி எந்திரத்தின் மூலம் இடித்து தள்ளியுள்ளார். இது மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்துள்ளது.  காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்துள்ள இந்த அராஜகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாநகரச் செயலாளர் அமர்நாத் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜேசிபி இயந்திரத்தை ஜப்தி செய்து ஓட்டுநரை கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும்  அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.