districts

img

ஹிஜாப் அணிவதை எதிர்ப்பதா? கடலூரில் தனியார் பள்ளிக்கு சிபிஎம் கடும் கண்டனம்

கடலூர்,செப். 1- கடலூரில் இரண்டு தனியார் பள்ளி யில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நட வடிக்கைக்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- கடலூர் நகரின் மையப் பகுதியில் கம்பியம்பேட்டையில்  இயங்கி வரும் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மற்றும் கடலூர் முதுநகரில் இயங்கும் சரஸ்வதி வித்யாலயா ஆகிய இரு பள்ளிகளும் ஒரே தாளாளருக்கு சொந்தமான இவ்விரு பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து பணிக்கு வருவதற்கும், பள்ளியில் பயிலும் மாணவிகள் அணிவதற்கும் தடை விதித்துள்ளனர்.  இதனால் அங்கு பணிக்கு செல்லும் ஆசிரியை பணியில் இருந்து விலக நேர்ந்துள்ளது. மாணவி களின் பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் தனித்தனியாக அழைத்து ஹிஜாப் அணிந்து வந்தால் பள்ளி யில் அனுமதிக்க முடியாது என திட்ட வட்டமாக தெரிவித்து இருப்பது மக்க ளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு தரப்பில் இருந்து ஹிஜாப் அணிவதற்கு எந்தவித தடை யானையும் இல்லாத நிலையில் இப்பள்ளி நிர்வாகிகள் தன்னிச்சை யாக முடிவெடுத்து பிரிவினைவாதம் ஏற்படுத்தும் விதத்தில் ஹிஜாப் பிரச்சனை கையில் எடுத்து செயல் படுவது தமிழகத்தில் சகோதரத்து வத்துடன் வாழக்கூடிய மக்கள் மத்தி யில் பிரிவை ஏற்படுத்தும் சூழலை உரு வாக்கும். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர்  உடனடியாக இந்த பிரச்சனையை கவனத்தில் கொண்டு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் இப்பள்ளியில் சுமார் 4500 பிள்ளைகள் கல்வி பயிலும் நிலை யில் அவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் 40 பிள்ளைகள் மட்டும் ஒரு வகுப்பில் என்ற விதியை மீறி 55 முதல் 60 பிள்ளைகள் வரை அனு மதிக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதிகள் இல்லாததால் பிள்ளைகளுக்கு நோய் தொற்று, சிறுநீர் உபாதைகள் போன்ற பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படுகின்றது.  நோட்டு புத்தகங்களுக்கு வசூ லிக்கப்படும் அதிகப்படியான தொகை, ஆண்டுதோறும் பள்ளி வளர்ச்சி நிதி தலா ரூ.2000 என கட்டண வசூலில் ஈடுபடும் இப்பள்ளியில் தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவதில்லை. நமது பண்பாடு கலாச்சாரம் என எதுவுமே தெரியாத குறிப்பாக தமிழ் ஒரு வார்த்தையும் அறியாதவரை தலைமை ஆசிரியராக நியமித்து  செயல்படும் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் முதல் பயிலும் மாணவ மாணவிகள் வரை பல இன்னல்களுக்கு ஆளாகி யுள்ளனர்.  குடியிருப்பு நகர் பகுதியில் மையத்தில் அமைந்துள்ள இப்பள்ளி சென்று வர போதுமான சாலை வசதி இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிச்சல், அடிக்கடி விபத்து என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை என பல்வேறு சர்ச்சைகள் இப்பள்ளியை சார்ந்து ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி இப்பள்ளியை ஆய்வுக் உட்படுத்தி உரிய தீர்வை ஏற்படுத்தி  இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி, எதிர்கால நலன் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு மாதவன் தெரிவித்தி ருக்கிறார்.