கடலூர், ஏப். 25- பண்ருட்டி நகரம் 26ஆவது வார்டு களத்து மேடு பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 200 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு என்று நீதிமன்ற உத்தரவின்படி வீடுகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முயற்சித்துள்ளது. இந்நிலையில் மாற்று இடத்தை உறுதி செய்தபின் வீடுகளை காலி செய்யுங்கள் என வலியுறுத்தி கடலூர் சார் ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார், பண்ருட்டி நகர செயலாளர் உத்திராபதி, கடலூர் மாநகர, செயலாளர் அமர்நாத், நடராஜன், தினேஷ் ஆகியோர் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சார் ஆட்சியர் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியரிடம் கூறியுள்ளார்.