districts

img

அறிவியல் இயக்கத்தின் வான்நோக்கு நிகழ்ச்சி

கடலூர், அக்.15- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் கிளையின் சார்பில் நடந்த வான் நோக்கு நிகழ்ச்சியில், தொலை நோக்கியின் மூலம் வியாழன் மற்றும் சனி கோள்கள், நிலவை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி யில், வானியல் குறித்து பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் மாவட்டப் பொருளாளர் உத யேந்திரன், உரையாடல் நடத்தினார். அறிவியல் இயக்க மாவட்டப் பொறுபாளர்கள் கேத்தரின், விக்டர் ஜெயசீலன் ஆகியோர் குழந்தைகளுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஆசிரியர் ஹேமலதா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் குழந்தைகளும், பெரியவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.