கடலூர் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, குள்ளஞ்சாவடி, பத்திரக்கோட்டை, சத்திரம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 762 ஏக்கர் நிலப்பரப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விவ சாயிகள் பன்னீர் கரும்பு பயிரிட்டு வந்தனர். மேலும் கடந்த சில ஆண்டு களாக பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசு தொகுப்பு டன் இலவசமாக பொது மக்களுக்கு கரும்பு வழங்கப் பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசு திடீரென்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு இல்லை என அறிவித்ததால் கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பெரு மளவில் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து தமிழக அரசு ஒரு ஜோடி கரும்பு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் குழு அமைத்து விவசாயிகளிடம் நேரடியாக சென்று பன்னீர் கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலை மையில் அதிகாரிகள் குழு பன்னீர் கரும்பு வாங்குவதற்கு நேரடியாக சென்று அத னுடைய தரம் மற்றும் உயரம் போன்றவற்றை முழுவதும் ஆய்வு செய்து விவ சாயிகளிடமிருந்து கரும்புகளை கொள்முதல் செய்தனர். இந்த நிலையில் அரசு அதி காரிகள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக சென்று பன்னீர் கரும்பு கொள்முதல் செய்ததை தொடர்ந்து தற்போது சுமார் 250 ஏக்கரில் பன்னீர் கரும்பு கள் விற்பனையாகாமல் அந்தந்த நிலத்தில் இருந்து உள்ளன. இதனை தொடர்ந்து விவசாயத்தில் பன்னீர் கரும்பு சுமார் 250 ஏக்கருக்கு மேல் விற்பனையாகாமல் இருந்ததால் மிகுந்த கவலையுடன் இருந்து வருகின்றனர். மேலும் பன்னீர் கரும்பு பயிரிட்டு அதனை ஒரு வருடம் பாது காத்து அதற்கு செலவு செய்து தற்போது விற்பனை ஆகாத தால் ஒருபுறம் கவலை ஏற்பட்டாலும் பெரும் நட்டத்தை யும் ஏற்படுத்தியுள்ளது என விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர். பன்னீர் கரும்பு பயிர் செய்ததற்கு லாபம் கிடைக்கா விட்டாலும் அசல் தொகை கிடைத்தால் போதுமானது என்ற நிலைக்கு விவசாயிகள் மன நிலை வந்துள்ளது குறிப்பிடத்தக்க தாகும். மேலும் இது போன்ற காலங்களில் அரசு உரிய முறை யில் விவசாயிகளுக்கு உதவி புரிய வேண்டும் என விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.