உதகை, ஜூன் 11- கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் நீலகி ரிக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை வெகு வாக குறைந்தது. சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகி ரிக்கு, கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்க ளில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமா னோர் வருவார்கள்.
ஆனால், இ - பாஸ் நடை முறை, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட கார ணங்களால் சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெகுவாக குறைந்து காணப்பட்டது. வழக்கமாக மே மாதம் கோடை சீசன் முடிந் தவுடன் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக் கப்படும். ஆனால், இந்த ஆண்டு நாடாளு மன்ற தேர்தல் முடிவுகள் 4 ஆம் தேதி அறி விக்கப்பட வேண்டி இருந்ததாலும், வெயில் காரணமாகவும் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இத னால், ஜூன் 9 ஆம் தேதி வரை நீலகிரிக்கு சுற்று லாப்பயணிகள் வருகை அதிகமாக இருந் தது. இந்நிலையில், ஜூன் 10 ஆம்தேதி பள்ளி கள் திறக்கப்பட்டதால் நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. ஏற்கனவே வந்தவர்களும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். ஆனாலும், ஓரளவு வந்த சுற்றுலாப்பய ணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா வுக்கு சென்று புல் மைதானத்தில் நீண்ட நேரம் பொழுது போக்கியும், அங்கிருந்து மலர் செடிகளை கண்டு ரசித்து அவற்றை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து, மலை ரெயிலில் வந்த சுற்றுலாப்பயணிகளும் மகிழ்ச்சியுடன் உதகையை சுற்றி பார்த்த னர். கடந்த காலங்களில் கோடை விடுமுறை யையொட்டி சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகளின் வருகை யையொட்டி வாழ்வாதாரத்தை வளமாக்கும் வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் போதிய வரு வாய் இல்லாமல் ஏமாற்றமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.