districts

img

உதகைக்கு சிறப்பு ரயில்

மேட்டுப்பாளையம், செப்.16- உதகைக்கு விடுமுறை கால சிறப்பு மலை ரயில்  சேவை சனியன்று  தொடங் கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச் சியடைந்துள்ளனர். “மலைகளின் அரசி” என்று அழைக்கப்படும்  ஊட்டிக்கு கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளை யத்தில் இருந்து உலக பாரம்பரிய சின்ன மான மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா  பயணிகளையும் ஈர்க்கும் நூற்றாண்டு  பழமை வாய்ந்த இம்மலைரயிலில் பயணித்த படி நீலகிரி மலையின் இயற்கை எழிலை  கண்டு ரசிக்க பெரிதும் விரும்பு கின் றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வழக்கமாக  காலை 7.10 மணிக் கும், உதகையில் இருந்து மேட்டுப்பாளையத் திற்கு பகல் 2 மணிக்கும் மலை ரயில் இயக் கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேட்டுப் பாளையம் - உதகை இடையே மற்றும்  உதகை -மேட்டுப்பாளையம் இடையே பண்டிகை கால சிறப்பு மலை ரயில் இயக் கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனையொட்டி, மேட்டுப்பாளையத் தில் இருந்து உதகைக்கு  சனியன்று காலை  9.10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு, உதகை க்கு பகல் 2.25 மணிக்கு சென்றடைகின்றது. முதல் வகுப்பில் 40 இருக்கைகளும், இரண் டாவது வகுப்பில் 140 இருக்கைகளும் ஒதுக் கப்பட்டுள்ளது.