உதகை, ஜூன் 12- சர்வதேச சுற்றுலாத்தலமான உதகை நகராட்சியை மாநகராட்சி யாக தரம் உயர்த்த வேண்டும் என உதகை நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டத்தின், தலைநக ரமான உதகை நகராட்சி 36 வார்டு களை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக 1987 ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்நகராட்சி யின் மொத்த பரப்பளவு 30.67 சதுர கிலோ மீட்டர் ஆகும். 20 ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 88,430 மக்கள் தொகை கொண்ட நகராட்சியாகும்.
இங்கு, தென்னிந்தியாவில் மிக வும் முக்கியமான சுற்றுலாத்தல மாக உதகை நகராட்சி விளங்கு கிறது. நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆளுநர் மாளிகை, அரசு தாவரவியல் பூங்கா, அரசு ரோஜா பூங்கா, படகு இல்லம், நீலகிரி பழங்குடியினர் அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலை சிகரம் ஆகி யவை அமைந்துள்ளன.
கோடைவிழா காலங்களில் உத கைக்கு லட்சகணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலத்தில் இருந்தும் வந்து செல்கின்றனர். உதகை நகரில் பிரிட்டிஷ்சாரால் தொடங் கப்பட்ட 158 ஆண்டுகள் பழமை யான நகராட்சி ஆகும். நகராட் சியின் எல்லையை விரிவாக்கம் செய்து, உதகை நகராட்சியை மாந கராட்சியாக தரம் உயர்த்தப்பட் டால் அரசு மேம்பாட்டுத்திட்டங்கள் ஒதுக்கீடு கிடைக்கப்பெறும். இது தொடர்பாக அரசுக்கு நகராட்சி மூலம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந் தது.
இந்நிலையில், நகர்மன்றத்தின் ஒப்புதல் பெற நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமையில் அவசர கூட்டம் செவ்வாயன்று நடைபெற் றது. இந்த கூட்டத்தில் உதகை நக ராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணை யர் ஏகராஜ் கூறியதாவது, உதகை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், உதகை நக ராட்சி உடன் இணைக்கப்படும் அனைத்து கிராம ஊராட்சிக்கும் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வாழ்வாதா ரம் மேம்படும்.
மேலும், உதகை நகரின் முக்கிய தொழிலான சுற்றுலா, மாநகராட்சி யாக தரம் உயர்த்தால் நகராட்சி மற் றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம், விவசாயம், தேயிலை உற்பத்தி ஆகிய தொழில் கள் வளர்ச்சி அடையும். இதனால், இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உரு வாகும். விசாலமான சாலைகள், பார்க்கிங் வசதிகள் போன்றவை கள் மாநகராட்சி தரத்துடன் நடைபா தைகள், வாகன பார்க்கிங் வசதிகள் கிடைக்கும். எனவே, மாநகராட்சி யாக தரம் உயர்த்த வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அர சுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என் றார்.