உதகை, ஜூலை 17- கன மழையின் காரணமாக குந்தா அணையில் இருந்து 2 மதகுகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கினா லும், அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால், குந்தா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கட் லாடா, ஒசஹட்டி, தங்காடு தோட்டம், பிக்குலி நீரோடைகளில் வழக்கத்தை விட தண்ணீர் வரத்து அதிகரித்து உள் ளது. அணைக்கு வினாடிக்கு 300 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், புதனன்று காலை நிலவரப் படி, குந்தா அணையின் முழு கொள்ளள வான 89 அடியில் தண்ணீர் நிரம்பி யது. அணையின் பாதுகாப்பை கருத் தில் கொண்டு, புதனன்று, 7 மணியிலி ருந்து, 2 மதகுகளில் வினாடிக்கு தலா 150 கனஅடி உபரி நீர் தொடர்ந்து வெளி யேற்றப்பட்டு வருகிறது.