districts

img

உதகையில் மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

உதகையில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய, இரு வடமாநில தொழிலாளிர்களில் ஒருவர் உயிரிழந்தார்.  

உதகை அருகே பாபுசா லைன் பகுதியில் கவுசல்யா என்பவரது வீட்டின் அருகே தடுப்புச் சுவர் கட்டுவதற்காகக் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (20), ஜாகீர் (26), இம்தியாஸ் மற்றும் அமீர் ஆகியோர் வேலை செய்துக் கொண்டிருந்தனர்.அப்போது, எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்தது. இதில், ரிஸ்வான் மற்றும் ஜாகீர் ஆகிய இருவர்  மண்ணில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை அகற்றி,  மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின் இருவரையும் உயிருடன் மீட்டனர்.

இருவரையும்  உடனடியாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஜாகீர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால்,  ரிஸ்வானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்தார் , அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார்.