districts

img

கன மழையால் உதகை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை, ஜூலை 17-
நீலகிரியில் தொடர்ந்து பெய்துவரும்  கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகபாதிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும் பந்தலூர் பகுதிக ளில் கனமழை பெய்து வருகிறது. மழைக்கு இதுவரை 10க்கும் மேற் பட்ட வீடுகளில் பக்கவாட்டு சுவர் இடிந்து சேதமாகியுள்ளது. அந் தந்த பகுதியில் வருவாய்த்துறை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங் கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை, 24 பேர் நிவாரண முகங் களில் தங்கியுள்ளனர். உதகை -  இத்தலார் சாலையில் பெரிய அள வில் மண்சரிவு ஏற்பட்டதால் போக் குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த நெடுஞ்சாலை துறையி னர் மணல் மூட்டைகளை அடுக்கி போக்குவரத்தை சீர்படுத்தினர். மாவட்டத்தில்,  15 இடங்களில் சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டு ள்ளது. மண் சரிவுகளை நெடுஞ் சாலை துறையினர், உள்ளூர் பொது மக்கள் உதவியுடன் உடனுக்குடன் சரி செய்து வருகின்றனர்.

மழை தொடர்வதால் மாவட்ட நிர்வாக சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடக்கி விடப்பட் டுள்ளது. பேரிடர் பாதிப்பு பகுதி களை வருவாய்த் துறையினர் நேரடியாக சென்று பொது மக்களி டம் குறைகளை கேட்டறிந்து வரு கின்றனர்.  வருவாய் துறையின ருடன் மாநில பேரிடர் மீட்பு குழுவி னர் குந்தா, உதகை, கூடலூர், பந்த லூர் பகுதிகளில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். கனமழைக்கு நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகள் படிப் படியாக நிரம்பி வருவதால் அணை கள் திறக்கும் பட்சத்தில் கரை யோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என,  வருவாய் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள் ளது.

மேலும், மழை காரணமாக மலை காய்கறி அறுவடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. உதகை மார்க்கெட் மண்டிகள் மற்றும் மேட்டுப்பாளையம் சந்தைக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து குறைந்த அளவிலான மலை காய்கறிகள் விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

உதகை அருகே எம். பாலாடா கொல்லிமலை ஓரம் நள்ளி, கல்லக் கொரைஹாடா உள்ளிட்ட பகுதிக ளில் மலை காய்கறிகள் நீரில் மூழ்கி யுள்ளது. மலை காய்கறிகள் பாதிக் கப்பட்ட பகுதிகளை அந்தந்த பகுதி வேளாண் உதவி அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலை காய்கறி தோட்டங் கள் பாதிக்கப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும். என, தோட் டக்கலைத் துறை தெரிவித்துள் ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறுகை யில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது. மழையால் பாதிக்கப் பட்ட பொதுமக்களுக்கு தேவை யான நிவாரண உதவிகள் உடனுக் குடன் வழங்க உத்தரவிட்டுள் ளேன். மழைக்கு பொதுமக்கள் தங்கும் பகுதியில் போதிய பாது காப்பு இல்லை என்றால் உடனே வருவாய் துறையை அணுகி அரு கில் உள்ள நிவாரண முகாம்களில்  தங்கலாம். என்றார். 

வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள்

உதகை சுற்றுவட்டார பகுதி களில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் பிற சுற்று லாத் தலங்களில் சுற்றுலாப் பயணி கள் இன்றி வெறிச்சோடி காணப்படு கிறது. உதகை படகு இல்லத்தில் இரண்டாவது நாளாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி மாவட்ட மலைப்ப குதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத் திருந்தது. 

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகி றது‌. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து செல்கிறது. குறிப்பாக, கோவை - பாலக்காடு சாலை அருகே உள்ள சுண்ணாம்புக்கல் காளவாய் தடுப் பணையில் புது வெள்ளம் சீறிப்பாய் வதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தும், புகைப்படம் எடுத்துச்சென்றனர். ஒரு சிலர் ஆர்வ மிகுதியில் ஆபத்தை உணராமல் அணைக் கட்டில் குளிக்கவும் தூண்டில் போட்டு மீன் பிடித்தும் வருகின்ற னர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புகைப்படம் எடுக்கவும், மீன் பிடிக்கவும், குளிக் கவும் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என உள்ளாட்சி நிர்வா கம் மற்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.