districts

img

கட்டுமானப் பணியின் போது மண் சரிந்து 6 பேர் பலி

உதகை, பிப். 7- உதகையில் கட்டுமானப் பணியின் போது தொழிலாளர்கள் மீது கழிப்பிடம் இடிந்து விழுந்த தில்,6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  நீலகிரி மாவட்டம் உதகை வட்டத்திற் குட்பட்ட லவ்டேல் காந்தி நகர் பகுதியில் பிரிட்ஜூ  என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீட்டின் மேல்பகுதியில் உள்ள பழைய கழிப்பிட  கட்டிடம் எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்து  உள்ளது.

இதில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டி ருந்தவர்கள் சிக்கிய நிலையில், மீட்புப்பணி யில், தீயணைப்புத்துறை மற்றும் பொதுமக்கள்  ஈடுபட்டனர்.  இந்த விபத்தில் சிக்கியவர்களில் முத்துலட்சுமி (36), சங்கீதா (30), பாக்கியம் (36), உமா (35), சகிலா (30), ராதா (38) என ஆறு  பெண்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும், மகேஷ் (23), சாந்தி (45), ஜெயந்தி (56), தாமஸ் (24) என நான்கு பேர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து  திடீரென கழிவறை கட்டிடம் சரிந்து விழுந்த நிலையில், உள்ளே சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

முன்னதாக இவ்விபத்து தொடர்பாக  உதகை பி1 காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும்  காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்க ளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதலைத் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்தி நகர் பகுதியில் புதனன்று நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில்  17 கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மண் சரிந்து 10 நபர்கள் சிக்கிய விபத்தில் ராதா (38), பாக்கியம் (36), முத்துலட்சமி (36),  உமா (35), சங்கீதா (30) மற்றும் சகிலா (30)  ஆகிய ஆறு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த னர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த  வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில்  காயமடைந்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜெயந்தி (56), சாந்தி (45),  தாமஸ் (24) மற்றும் மகேஷ் (23) ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வ தோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது  நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தர விட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.