districts

img

விவசாயிகளிடம் லஞ்சம் பெறாமல் மின் இணைப்புகளை வழங்க வலியுறுத்தல்

உடுமலை ஜூலை 14-  மின் இணைப்பு வழங்க விவசாயிகளிடம் பணம் வாங்கும் உடுமலை மின்வாரிய அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்   என தமிழ்நாடு விவசாய சங்கத்தின்  உடுமலை   ஒன்றிய மாநாடு 14 ஆம் தேதி வியாழக்கிழமை  கரட்டுமடத்தில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மா னம் நிறைவேற்ற பட்டது. உடுமலை ஒன்றிய விவசாய சங்க தலை வர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற  மாநாட்டில்   விவசாய சங்க மாவட்டத்தலை வர் எஸ்.ஆர். மதுசூதனன் துவக்கவுரையாற்றினார். கடந்த கால வேலை அறிக்கையை  செயலாளர் பாலதண்டபாணியும், மாநாட்டு தீர்மானங்களை பொருளாளர் பரமசிவம் முன் மொழிந்தார்.

ரசு அனைத்து விவசாயிகளுக்கும் இலவச  மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற் படுத்தி இருந்தாலும் மின் இணைப்பு வழங்க  உடுமலை, தளி மற்றும் மானுப்பட்டி மின்  வாரிய அலுவலத்தில் உள்ள மின்வாரிய அதி காரிகள் விவசாயிகளிடம் அதிகமாக பணம்  பெற்றுதான் மின் இணைப்பு வழங்குகிறார் கள் இவர்கள் மீது நடவடிக்க  எடுக்க பல முறை  புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை  இல்லாமல் இருப்பதை கண்டித்தும் மின் இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு மின்  இணைப்பு வழங்க வேண்டும் என்றும், பல  ஆண்டுகால விவசாயிகளின் கோரிக்கை யாக உள்ள   நல்லாறு - ஆனைமலையாறு அணைத் திட்டங்களை நிறைவேற்றி, பிஏபி  திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும், பிஏபி ( பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட் டம்) பாசனத்தில் முறைகேடாக தண்ணீர்  எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேங்காய் கொப்பரையை கிலோ  ரூ.150/, தேங்காய் ஒரு கிலோ ரூ.50/க்கும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும், மாட் டுப்பால் லிட்டருக்கு ரூ.42 /க்கும், எருமைப் பால் ரூ.50/க்கும் கொள்முதல் செய்திட வேண்டும், தக்காளி உள்ளிட்ட காய்கறிக்க ளுக்கு உரிய விலை கிடைத்திட நடவடிக்கை  எடுக்க வேண்டும், பிஏபி பாசனம் துவங்கும் முன்பாக பாசனக் கால்வாய்களைத் தூர்வார  நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர்வழிப்பா தைகளில் புதிய குளம், குட்டைகளை அமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும், திருமூர்த்தி, அமராவதி அணை மற்றும் குளம், குட்டைகளில் விவசாயிகள் ஆண்டு  முழுவதும் வண்டல்மண் எடுக்க அரசு அனு மதி வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டம் அனைத்து விவசாயப் பணிகளுக்கும், அனைத்து விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில் செயலாபடுத்தப்பட வேண்டும்,  வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புக ளுக்கு வழங்கும் இழப்பீட்டை இருமடங்காக  உயர்த்தி வழங்குவதோடு, வனவிலங்குகளி டமிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உரவிலையை கட்டுப்ப டுத்த மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்,  உடுமலை தினசரி மார்க்கெட்டில் விவசாயி கள் கொண்டுவரும் காய், கனிகளுக்கு உரிய  இடவசதி மற்றும் சுங்கம், நுழைவு வரியை  முறைப்படேத்தியும், ஆடு, மாடு விற்ப னைக்கு உரிய இட வசதி செய்து தர வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

இதையடுத்து உடுமலை ஒன்றிய விவ சாய சங்கத்திற்கு  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள் இதன்படி ஒன்றிய தலை வராக ராஜகோபால், செயலாளராக பால தண்டபாணி, பொருளாராக உடுக்கம்பாளை யம் பரமசிவம், துணை தலைவர்களாக  வல்லகுண்டாபுரம் பரமசிவம், அருண்பி ரகாஷ் மற்றும் துணை செயலாளராக முருக வேல், மாடலோகேஷ்வரன் ஆகியோர் தேர்வு செய்யபட்டார்கள்  இவர்களை அறிமு கம் செய்து வைத்து நிறைவுரையாக மாவட்ட  செயலாளர் ஆர். குமார் பேசினார்.