உடுமலை, மார்ச். 1- உடுமலை வல்லக்குண்டாபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மது கூர் ராமலிங்கம் பங்கேற்று சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மார்க்சிஸ்ட் கட்சியினரை உண்டியல் குலுக்கிகள் என்று விரோதிகள் அவதூறு பரப்புவதுண்டு. அப்படி சொல்வது எங்களுக்கு பெருமை யான ஒன்றுதான்.
எப்படி கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் புனித மானவையோ, அது போல கம்யூ னிஸ்டுகளின் உண்டியலும் புனிதமா னது. கோவில் உண்டிகளில் வரும் பணம் கடவுள் எடுத்துக் கொள்வ தில்லை. அப்பணத்தை எடுத்து கோவிலுக்கு செலவு செய்வதுண்டு. அதேபோல கம்யூனிஸ்டுகளும் உண்டியல் பணத்தை மக்களுக்கு சேவை செய்ய மக்களுக்கான கோரிக்கைகளுக்காக போராட, இயக்கங்கள் நடத்த செலவு செய் யப்படுகிறது. இதுதான் செங்கொடி இயக்கத்தின் கொள்கை. ஆனால், பாஜகவின் கொள் கையோ சாதி, மத ரீதியாக மக்களை மோதவிடுவதுதான். பாஜக தலை மையிலான மோடி ஆட்சி இருக்கும் வரையில் சாமானிய மக்களுக்கு எந்த வித நன்மையும் இல்லை. விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்துக்களை பாதுகாப்போம் என்று ஆட்சிக்கு வந்த பாஜக ஆட்சி யில்தான் இந்துக்கள் அதிகம் பாதிக் கப்படுகின்றனர். இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் வருவதற்கு மார்க்சிஸ்ட் கட்சிதான் காரணம். இன்று கிராமப்புறங்களில் வறுமை ஓரளவு குறைந்ததற்கு ஊராக வேலை திட்ட வேலை தான் முக்கிய காரணம். மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவில் அமைந்த ஐக் கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை தற்போது மோடி அர சாங்கம் ரத்து செய்வதற்கு தவியாய் தவிக்கிறது.
பாஜக ஆட்சியின் பத்தாண்டு கால ஆட்சியில் ஜிஎஸ் டி வரி மூலம் மக்களிடம் பெருந்தொ கையினை வசூலித்து பெரும் கார்ப் பரேட்களுக்கு அள்ளிக் கொடுக் கிறார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாரா மன் தற்போது சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படும் பிணத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி தொகையில் சிறிய தொகை குறைத்து விட்டு அதை பெருமை யாக பேசிக் கொண்டிருக்கிறார். இவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை இது போன்ற இன்னல்கள் தொட ரும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இருக்கும் ஜனநாயகத்திற் கும் பேராபத்து. எனவே 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன் றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களை ஆதரித்து வெற்றி பெற செய்து ஜனநாயகம் காக்க வேண்டும் என் றார்.