உடுமலை, டிச.7- இந்திய புலிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வனப் பணியாளர்க ளுக்கு குளிர்கால கணக்கெடுப்பு பயிற்சி சனியன்று நடைபெற்றது.
தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு வழிகாட்டுதலின்படி திருப்பூர் வனக்கோட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டிச.7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 8 நாட்கள் குளிர்கால புலிகள், இதர மாமிச மற்றும் தாவர உண்ணிகளின் கணக்கெடுப்பு பணி கள் நடைபெறுகிறது. திருப்பூர் வனக்கோட்டத்தில் உடுமலைப் பேட்டை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு ஆகிய வனச்சரகங்களிலுள்ள 34 சுற்றுகளில் இப்பணி நடைபெற உள் ளது. இச்சுற்றுகளில் 53 நேர்கோட்டுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பணியில் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டு கீழ்க்கண்ட அட்டவணைப்படி 3 நாட்கள் சுற்றுகளிலுள்ள பகுதிகளில் காணப்படும் மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடய கணக்கெடுப்பையும், அடுத்த 3 நாட்கள் டிச.11 முதல் 13 வரை நேர்கோட் டுப் பாதையில் நடந்து சென்று நேரடி யாக காணப்படும் இரை விலங்குகளை யும் (தாவர உண்ணிகள்), அதே பாதை யில் திரும்பி வரும்பொழுது ஒவ்வொரு 400 மீட்டர் இடைவெளியில் உள்ள பிளாட்களில் தாவர வகைகளையும் கணக்கெடுக்கப்படுகிறது. இதை முன் னிட்டு குளிர்கால புலிகள் கணக்கெடுப் புகள் குறித்து வனப்பணியாளர்களுக்கு மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகு மார் மீனா, தலைமையில் பயிற்சி வகுப்பு கள் நடைபெற்றது.