திருப்பூர், டிச.7- உடுமலை அமராவதி அணையில் இருந்து டிச.6 ஆம் தேதி முதல் 2025 பிப் ரவரி 24 ஆம் தேதி வரை பழைய ஆயக் கட்டு பாசனத்துக்காக வெள்ளியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அம ராவதி அணை, இந்த ஆண்டு தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை யால் முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பாசனப் பகுதிகளுக்கு அமராவதி ஆற்றிலும், பிரதான கால் வாயிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த வாரம் கேரள – தமிழக எல்லையில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந் நிலையில், விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று அமராவதி பழைய பாச னப் பகுதிகளான இராமகுளம், கல்லாபு ரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிப் புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத் தூர், காரத்தொழுவு என முதல் எட்டு பழைய ராஜாவாய் கால்களுக்கு உட் பட்ட 7,520 ஏக்கர்களுக்கு வெள்ளி யன்று அணையின் கீழ் மதகுகள் வழி யாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும், டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 24 ஆம் தேதி இடைவெளி விட்டு 41 நாள்களுக்கு தண்ணீர் திறப்பு, 39 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படை யில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
அமராவதி அணையில் இருந்து 1062.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு அனுமதி அளித்துள்ளது. சனியன்று நிலவரப்படி 90 அடி உயர முள்ள அணையின் நீர்மட்டம் 88.42 அடி யாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 351 கன அடி. 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,910.29 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து 438 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.